Monday, 13th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த ஆடுதுறையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இயற்கை மருத்துவ சங்கம் சார்பில் யோகா பயிற்சி போட்டிகள் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகாசனங்கள் செய்தனர்.
கும்பகோணத்தை அடுத்த ஆடுதுறையில் ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது அதனையொட்டி இன்று யோகா தினத்தை முன்னிட்டு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம் சார்பில் ஐந்தாவது யோகா தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் மற்றும் பெண்கள் முதியவர்கள் என பலர் கலந்துகொண்டு இடைவிடாத யோகாசனங்கள் செய்து அசத்தினர்.மேலும் கலந்துகொண்ட அனைவருக்கும் இயற்கை உணவுகள் மற்றும் இயற்கை பானங்கள் வழங்கப்பட்டது.
போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு சிறப்பு நினைவு பரிசுகளும் கலந்து கொண்ட மாணவ மாணவியர் மற்றும் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை இயற்கை மருத்துவ சங்கத்தினர் செய்திருந்தனர்.